Wednesday, 19 May 2010

பகல் ஒரு பைத்தியம்
உள்ளதையெல்லாம்
உளறிக்கொட்டுகிறது ......
இரவு ஒரு இரகசியம்
எல்லாவற்றையும்
மூடி மறைகிறது ....ஆனால்
நானோ ஓர் அதிசயம்
மறைபதுமில்லை
எதையும் உறைப்பதும்மில்லை!!

மாலை

நினைவுகளில்
நீர் மாலை
கோர்க்கத் தெரிந்த
எனக்கு நிஜத்தில்
பூமாலை தொடுக்க தெரியவில்லை

Monday, 17 May 2010

சேரும் முகவரி சரியில்லை
அனுப்பிய முகவரியும்
அதிலில்லை
ஒரு கடிதம்
அனாதியாகிவிட்டது !!

பிரிவு

பிரிவு என்பது
நிரந்தரமல்ல
மரணமும் கூடத்தான் !!

நீ


எனக்காக நீ கொஞ்சம் கண்ணீர் உகுப்பாயானால் உனக்காக நான் என் கண்களையே உகுப்பேன் ....!!!

Thursday, 13 May 2010

வேண்டாம் மனிதர்களே .....
சின்னச் சின்னதாய் இந்த ......
சவுக்கடிகள் வேண்டாம் ......
இதழ்கள் ஒவ்வொன்றாய்
கிள்ளி இந்த மலருக்கு
மரண தண்டனை வேண்டாம்.......
வளர்த்திருக்கும் விரல்களில்
மலரை வேரோடு கிள்ளிவிடுங்கள்
மரணங்கள் ஒரு நிமிடத்தில்
நிகழ்துவிட!!!

Wednesday, 12 May 2010


வாழ்வில் உதிரும் சொட்டுகள்
ஈரமானவை.......இனிப்பானவை .....
ஆனால் இங்கு
இரும்பை விட கனமாய் .....
நெருப்பை விட எரிவாய் .....
ரோஜாவை பறித்து
ஒவ்வொரு இதழாய்
உரித்து ....உதிர்த்து....
கசக்கினால் அந்த
மலரின் வலியும் என்....
மனதின்[மலரின்] வலியும் ஒன்றாய் ....!!!